Wednesday 23 January 2013

Australia OSA and EDC Completing another project worth approx 10 lakhs.

சுழிபுரம் விக்டோரியாக்  கல்லூரியில் இன்று ஒரு பொன்னான நாள். அவுஸ்திரேலியா பழைய மாணவர் ஒன்றியத்தின் முயற்சியால்,   எல்லோரது அன்புக்கும் மதிப்பிற்கும் காரணமான, திருமதி ஆசைப்பிள்ளை ஆசிரியர் ஞாபகார்த்த கணினி ஆய்வுகூடம் திறந்துவைக்கப்பட்டதோடு,
வெளிநாட்டில் வதியும் பழையமானவர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணுவதால் கல்லூரி அபிவிருத்தியில் பாடுபடும் ஓய்வுபெற்ற பிரதியதிபர் திரு கா. இந்திரராஜா அவர்கள் கௌரவிக்கப்பட் நிகழ்வும் நடந்தேறியுள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா மற்றும் லண்டன் பழைய மாணவர் ஒன்றியங்களால், பொன்னாடை போர்த்தி, சந்தன மாலை அணிவித்துநினைவுப்பரிசு வழங்கி திரு இந்திரன் ஆசிரியர் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்
நிகழ்வில் உரையாற்றிய அதிபர் உயர்திரு  ஸ்ரீகாந்தன் அவர்கள், திரு நித்தியானந்த மனுநீதி,. திரு ,. விஜயநாதன், திரு சத்தியகீர்த்தி மற்றும் திரு . தயாபரன் ஆகியோர் பாடசாலைக்கு ஆற்றிய அரும்பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.
அதனைத்தொடர்ந்து அவுஸ்திரேலியா சார்பில் திரு நித்தியானந்த மனுநீதி,மற்றும் திரு சத்தியகீர்த்தி ஆகியோரும், கனடா சார்பில் முன்னாள் ஓய்வுபெற்ற அதிபர் திருமதி வேலுப்பிள்ளை அவர்களும், லண்டன் சார்பாக திரு தயாபரன் அவர்களும் ஓய்வுபெற்ற பிரதியதிபர் திரு கா. இந்திரராஜா அவர்களைக் கௌரவித்தனர்..
அதனைத் தொடர்ந்துதிரு நித்தியானந்த மனுநீதி,. திரு ,. விஜயநாதன், திரு சத்தியகீர்த்தி, திரு . தயாபரன்திருமதி வேலுப்பிள்ளை, திரு .ஸ்ரீரங்கன் மற்றும் அதிபர் ஆகியோர் மங்கள விளக்கேற்றதிரு நித்தியானந்த மனுநீதி,. திரு ,. விஜயநாதன் மற்றும் திரு சத்தியகீர்த்தி ஆகியோர், நாடவினை வெட்டி கணினி ஆய்வுகூடத்தினை மாணவர்களிடம் கையளித்தனர்.
திரு நித்தியானந்த மனுநீதி அவர்கள் பெயர்ப்  பலகையினைத் திரை நீக்கம் செய் துவைக்கதிரு . தயாபரன் அவர்கள் முதலாவது கணினியினை இயக்கி வைத்தார்.
குளிரூட்டப்பட்ட, அண்ணளவாக 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு இக்கணினி ஆய்வுகூடமானது, 11 கணினிகள் மற்றும் 1 பிரிண்டரினைக் கொண்டதோடு, அனைத்தும் வலையமைப்பினால் இணைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கணிணிகளைப்  பயன்படுத்த முற்பட்டமை அவதானிக்கப்பட்டது