Thursday 24 January 2013

கலந்துரையாடல்

இன்று விக்ரோறியாக் கல்லூரிக்கு வருகை தந்த திரு.அ.நித்தியானந்தமனுநீதி, திரு.சு.சத்தியகீர்த்தி, திரு.அ.தயாபரன் மற்றும் முன்னாள் அதிபர் திருமதி.அ.வேலுப்பிள்ளை ஆகியோர் அதிபரின் தலைமையில் மாணவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர். உயர்கல்விக்கான பாடங்களைத் தெரிவுசெய்தல், தொழில் வாய்ப்புகளை உறுதிப்படுத்துதல் போன்ற
மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கான பல விடயங்கள் இந் நிகழ்வின் போது மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.