Friday 18 January 2013

வெளிநாட்டு மாணவர்களுக்கு வீசா வழங்க இங்கிலாந்து புதிய விதி முறை

வெளிநாட்டு மாணவர்கள் வீசாவினைப் பெற்றுக் கொள்வதற்கு இங்கிலாந்து பல்வேறு புதிய நடை முறைகளை அமூல்படுத்தவுள்ளது.
இதில் சில நாடுகள் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் படித்து முடித்த பின் 2ஆண்டு வேலை செய்வதற்கான விசா வழங்குகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழஙகுவதற்கு இங்கிலாந்து பல புதிய விதிமுறைகளை அமூல்ப்படுத்தியுள்ளது.
குறிப்பாக தமது கல்வியை படித்து முடித்த பின் 2ஆண்டுகள் வேலை செய்வதற்காக வழங்கப்படும் விசா நடைமுறையினை இந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து இரத்துச் செய்யப்படும் என்று இங்கிலாந்து குடியேற்றத்துறை அமைச்சர் டேமியன் கீரின் அறிவித்துள்ளார்.
இந் நடைமுறை மட்டுமன்றி இது மட்டுமல்ல இன்னும் பல புதிய விதிமுறைகள் அமுல்ப்படுத்தப்படும் இங்கிலாந்தில் படிப்பு முடிக்கும் மாணவர்கள் வேலை செய்ய விரும்பினால் அதற்கென தனியான விசாவினைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்களும் கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பல்கலைக்கழகங்களும் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

மாணவர்களினுடைய விசாக்களில் பல கெடுபிடிகளை அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் கொண்டு வந்தன. அதனால் உயர் கல்வித் துறையில் இருந்து இந்த நாடுகள் வாபஸ் பெற்றன. இந்த நிலையானது இங்கிலாந்து அரசுக்கு வரக் கூடாது என்று எச்சரித்துள்ளன.