Tuesday 3 September 2013

வரலாற்றில் முதல் தடவையாக தோற்பந்து துடுப்பாட்டத்தில் வெற்றி

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் தென்பகுதியிலுள்ள பாடசாலைகளுடன் தோற்பந்து துடுப்பாட்டத்தில் ஈடுபடக் கூடியதான வெற்றிகளை எமது கல்லூரியின் 17 வயது துடுப்பாட்ட அணி பெற்றுள்ளது.

மானிப்பாய் இந்துக் கல்லூரியை (தேசிய பாடசாலை) வெற்றி கொண்டதன் மூலம் கெக்கிராவை மத்திய கல்லூரியுடன் அடுத்த துடுப்பாட்டம் வெள்ளிக்கிழமை கெக்கிராவையில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்தின் திரு.ஆனந்தகுமார் சென்ற மாதம் இங்கு வருகை தந்து இவ்வீரர்களுக்கு வலுவான பயிற்சி வழங்கியிருந்தார். ஐக்கிய இராச்சியம் பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் திரு.மனோகரன் ஆறு சப்பாத்துகளும் பந்துகளும் கொள்வனவு செய்ய 20000/= வழங்கியுள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள பழைய மாணவர்களின் பெரும் உதவியும் பழைய மாணவர்களான திரு.தவராஜா, திரு.சிவரூபன் அவர்களின் தொடர்ச்சியான பயிற்சிகளும் பொறுப்பாசிரியர்களான திரு.மதிதரன், திரு.கண்ணதாசன் ஆகியோரின் அர்ப்பணிப்பும் இவ்வெற்றிகளுக்கு காரணமாகும். மிகவும் செலவு கொண்டதான இந்தத் தொடரில் வீரர்கள் மேலும் முன்னேற பழைய மாணவர்களின் உதவிகள் இன்னும் தேவைப்படுகின்றன.