Wednesday 4 September 2013

துடுப்பாட்டப் போட்டியில் மீண்டும் மாபெரும் வெற்றி

Sri Lanka Cricket Association ஆல் இன்று சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்கும், மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் விக்ரோறியாக் கல்லூரி 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
இன்று மானிப்பாய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓட்டங்கள் கொண்ட துடுப்பாட்டப் போட்டியில் நாணய மாற்றுச் சுழற்ச்சியின் மூலம் மானிப்பாய் இந்துக்கல்லூரி முதலில் துடுப்பாட்டக் களத்தில் இறங்கியது. மானிப்பாய் இந்துக்கல்லூரி சகல விக்கட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. மானிப்பாய் இந்துக்கல்லூரியின் சார்பில் திலக்சன், 68 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். விக்ரோறியாக் கல்லூரியின் பந்து வீச்சில் வி. கஜன் 37 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளையும், கோகுலராஜ் 11 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுகளைக் கைப்பற்றி உள்ளனர். அதனைத் தொடர்ந்து துடுப்பாட்டக் களத்தில்  இறங்கிய விக்ரோறியாக் கல்லூரி 35.1 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுள்ளனர். விக்ரோறியாக் கல்லூரியின் சார்பில் அணித்தலைவர் K. பிரதீப் 48 ,ஓட்டங்களையும் k.பிரசாந்த் 37 ,ஓட்டங்களையும் பெற்றதன் மூலமாக விக்ரோறியாக் கல்லூரி 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
 இவ் வெற்றியின் மூலம் விக்ரோறியாக் கல்லூரி தென்பகுதியில் கெக்கராவ மத்திய கல்லூரியுடன் விளையாட தகுதி பெற்றுள்ளது. இப் போட்டி எதிர்வரும் 07.09.2013 அன்று கெக்கராவ மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மானிப்பாய் இந்துக்கல்லூரியுடன் விளையாடி வெற்றி பெற்ற அனைத்து சுழிபுரம் விரோறியாக்கல்லூரி வீரர்களுக்கும் ,பயிற்சியாளர்களுக்கும்  அதிபர் ஸ்ரீகாந்தன் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் ,பழைய மாணவர்கள் மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் அனைவரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .

யுகே பழைய மாணவர் ஒன்றியம்