Thursday 5 September 2013

Prefects' Batch Installation and OSA-UK Mr Tharmalingam's Visit

நேற்று கல்லூரியின் மாணவ முதல்வர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்திலிருந்து வருகை தந்திருந்த திரு.செ. தர்மலிங்கம் அவர்களும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற திருமதி. செல்வராணி தேவராஜா அவர்களும் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு முதல்வர் சின்னங்களை அணிவித்தார்கள்.
மாணவமுதல்வர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வினை அடுத்து திரு.செ.தர்மலிங்கம் அவர்கள் உரையாற்றினார்கள். வெளிநாடுகளில் வாழும் கல்லூரிப் பழைய மாணவர்கள் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர் எனவும் மாணவர்கள் அதனைப் பயன்படுத்தி தம்மை கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகளில் வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் தான் எதிர்பார்க்காத நிலையில் இவ்விழாவில் கலந்துகொள்ளக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பெரும்பேறாகக் கருதுவதாகவும் கூறி மாணவர்களுக்கு தனது ஆசிகளையும் கல்லூரியின் உயர்வுக்கு உழைக்கும் ஆசிரியர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

See More Photos