Thursday 24 October 2013

மரண அறிவித்தல்- திரு கந்தசாமி சின்னத்தம்பி

அன்னை மடியில் : 13 டிசெம்பர் 1930 — ஆண்டவன் அடியில் : 23 ஒக்ரோபர் 2013

சுழிபுரம் பறாளை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சின்னத்தம்பி அவர்கள் 23-10-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம் தம்பதிகளின் ஏகபுத்திரனும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம்(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரிக்கா(பிரான்ஸ்), இரவிச்சந்திரன்(பிரான்ஸ்), ஜெயச்சந்திரன்(பிரான்ஸ்), அருட்சந்திரன்(பிரான்ஸ்), கணேசமூர்த்தி(இலங்கை), விக்னேஸ்வரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவராஜா(பிரான்ஸ்), மங்களலட்சுமி(பிரான்ஸ்), கௌரிமனோகரி(பிரான்ஸ்), ஜெயராணி(பிரான்ஸ்), கிருஸ்ணமாலா(இலங்கை), ரேணுகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், சரசுவதி, கண்மணி, மகேஸ்வரி, இராசமணி மற்றும் பரமேஸ்வரி(இலங்கை), அன்னேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சோமசுந்தரம், திருநாவுக்கரசு, செல்லம்மா மற்றும் நடராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாட்சாயினி(Chambre Francaise de Commerce au MAROC , MBA Business Engineering), தேவாஜினி(Engineering: Hanyang Universite, SEOUL KOREA), விக்னா(Engineering: Polytechnique Pierre et Marie Curie, France), ரஜித்(தொழிலதிபர் - PARADIS DE LOUVRES, France), லுக்‌ஷன்(BTS Comptabilite Ecole IFSAIG, France), ரதுஷன், நிதுஷன், ஜெகானன்(Engineering: ESEO Ecole d'Ingenieurs , France), ஜெகதா(பிரான்ஸ்), ஜெகானி(பிரான்ஸ்), ஈழப்பிரியன்(பிரான்ஸ்), அரவின்நாத்(பிரானஸ்), சுருதி(பிரான்ஸ்), ஜஸ்வந்நாத்(பிரான்ஸ்), சங்கீர்த்தன்(இலங்கை), சங்கவி(இலங்கை), லதாங்கி(பிரான்ஸ்), சாரங்கி(பிரான்ஸ்),  ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடலானது 23-10-2013 புதன்கிழமை முதல் 28-10-2013 திங்கட்கிழமை வரை 16 Rue du Coupé Oreille 95400 Villiers le Bel, France என்னும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்  பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்