Monday 21 October 2013

G.C.E (O/L) exam view project

இவ்வருடம் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடைபெறுகின்றன. வலிகாமம் கல்வி வலயத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வகுப்புக்கள் காலை பாடசாலை ஆரம்பமாகும் முன்னர் ஒரு மணி நேரமும் மாலை பாடசாலை நிறைவடைந்த பின்னர் ஒரு மணி நேரமும் நடைபெறுகின்றன. கல்லூரியின் பிரிவுத்தலைவர் திரு.நா.திருக்குமாரன் அவர்கள் இத்திட்டத்தின் இணைப்பாளராக இருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் வழிப்படுத்துகின்றார். பிரதான பாடங்களான கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், வரலாறு, தமிழ் ஆகியவற்றிற்கு கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டு பரீட்சையை மையமாகக் கொண்டு இத்திட்டம் நடைபெறுகின்றது. இன்று முதல் மேற்கூறிய பாடங்கள் ஒவ்வொரு நாளும் முழுநாட் செயலமர்வுகளாக மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டு கருத்தரங்குகளாக முன்னெடுக்கப்படுகின்றன. எமது கல்லூரி மாணவர்களுடன் பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம், மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை என்பவற்றின் மாணவர்களும் இணைந்துள்ளனர். க.பொ.த.சாதாரண தர மாணவர்களின் பரீட்சை அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.