Monday 21 October 2013

Scout Ralley

காங்கேசன்துறை சாரணர் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மூன்று நாள் பாசறை நிகழ்வுகள் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்றன. எங்கள் கல்லூரியின் 38 சாரண துருப்பினர் சாரண ஆசிரியர்களான திரு.செ.சிவகுமாரன் (மாவட்ட உதவி ஆணையாளர்), திரு.சி.நிரஞ்சதுர்க்கன், திரு.பொ.சுதாகரன், திரு.க.கோகிலன் ஆகியோரின் வழிப்படுத்தலில் இப்பாசறையில் பங்குகொண்டனர். முதல் இரு நாட்களும் கல்லூரியில் பாசறை அமைத்து சிறப்பாக தமது பாசறை நிகழ்வுகளை ஆற்றினர். மூன்றாம் நாள் சாரண மாவட்ட நிலையிலான போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வுகளும் மல்லாகம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றபோது அதிலும் கலந்துகொண்டு தமது பங்களிப்பினை வழங்கினார்கள். எமது கல்லூரியிலிருந்தே அதிகளவு சாரண மாணவர்கள் மேற்படி பாசறை நிகழ்வுகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.