Wednesday 13 November 2013

Books Donation

எமது கல்லூரியின் நூலகத்திற்கென பெறுமதி வாய்ந்த புத்தயங்களை ஐக்கிய ராச்சியத்தில் வதியும் அன்பர் திரு.சி.செந்தில் செல்வன் அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளார். யாழ்ப்பாண மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மிக ஈடுபாடு கொண்ட செந்தில்செல்வன் அவர்கள் அங்குள்ள சில பாடசாலைகளின் நூல்நிலையங்களுக்கு புத்தகங்களை வழங்கி வருகின்றார். அதன் தொடர்ச்சியாக எமது கல்லூரி நூல்நிலையத்திற்கு ஆங்கில மொழியிலான புத்தகங்களைத் தந்துள்ளார். மாணவர்களின் வாசிப்பு ஆற்றலைத் தூண்டக்கூடியதான சிறிய கதைப்புத்தகங்களும்இ கற்றலுக்குத் தேவையான சிறந்த புத்தகங்களும் அதிலடங்கியுள்ளன. இவரது இவ்வுதவிக்கு கல்லூரிச்சமூகம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. இப்புத்தகங்களை திரு.வி.உமாபதி அவர்கள் துறைமுகத்திலிருந்து பொறுப்பேற்று கல்லூரியில் கொண்டுவந்து தந்துள்ளார்.