Saturday 30 November 2013

Colors Night - 2013

தேசிய  மட்டத்தில்  பாடசாலைகளுக்கிடையில்  நடைபெற்ற  மெய்வன்மைப்  போட்டிகளில்  வெற்றி  பெற்ற  வீர வீராங்கனைகளை  கௌரவிக்கும்  ”வர்ண  இரவுகள்”   நிகழ்வு  (Colors Night)  சென்ற  வியாழக்கிழமை  கோப்பாய்  தேசிய கல்வியியற்  கல்லூரி  மண்டபத்தில்  வட  மாகாணக்  கல்வியமைச்சர்  திரு.த.குருகுலராஜா  தலைமையில் நடைபெற்றது.  வட  மாகாண  முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன்  அவர்கள்  பிரதம  அதிதியாகக்  கலந்துகொண்டார்.  எமது  கல்லூரியிலிருந்து  19  வயதுப்  பெண்கள்  பிரிவில்  செல்வி.பா.றஜிதா  ஈட்டி  எறிதல்  நிகழ்ச்சியில்  தேசிய  ரீதியில்  இரண்டாம்  இடம்  பெற்றமைக்காகவும்  பயிற்றுநர்  விக்ரோறியன்  திரு.ந.சிவரூபன்  இவ் வீராங்கனைக்கான  பயிற்சிகளை  வழங்கியமைக்காகவும்  பதக்கம்  அணிவித்து  பணப்பரிசு  வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்.