Sunday 29 December 2013

சாரணருக்கு நன்றி



கடந்த மாதம் பல இலட்சம் ரூபா செலவில் அதிகளவு நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கட்டப்படுள்ள பாரதி முன்பள்ளியின் திறப்புவிழாவிற்கு சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் செல்வன் – நிரோஜன் தலைமையில் சாரணர் உறுப்பினர்கள் பல நற்சேவைகளை வழங்கியுள்ளார்கள். இவர்கள் செய்த நற்சேவையில் எமது திறப்புவிழா சிறந்த முறையில் நிறைவுபெற்றுள்ளது.
எமது கல்லூரி சாரணர்களின் சேவைக்கு பாரதி முன்பள்ளியின் நிர்வாகத்தினர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
செல்வன் – நிரோஜன் இந்த வருடம் எமது கல்லூரியின் சார்பில் ஜனாதிபதி விருதை பெறுவதற்கான தேர்வில் பங்குபற்ற உள்ளார். இவர் ஜனாதிபதி விருதைப்பெற எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கின்றது .
எமது கல்லூரியின் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி விருதைப்பெற்றவர் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உபதலைவர் திரு .சி .ஸ்ரீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
                               நன்றி
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .