Wednesday 25 December 2013

Fare well Party

எமது கல்லூரியில் 24 வருடங்கள் கல்விப் பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி.அரியமலர் சற்குணசிங்கம், 22 வருடங்கள் கல்விப் பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி.செல்வராணி தேவராஜா ஆகியோரின் சேவைநலன் பாராட்டு விழா அண்மையில் கல்லூரியின் றிஜ்வே மண்டபத்தில் சிரேஸ்ட மாணவ முதல்வி செல்வி.த.நிதுஷா தலைமையில் நடைபெற்றது. எமது முன்னாள் அதிபர் திருமதி.அ.வேலுப்பிள்ளை, தற்போதைய அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். உடல் நலக்குறைவால் திருமதி.அரியமலர் சற்குணசிங்கம் அவர்கள் கலந்து கொள்ளமுடியவில்லை. தங்கப் பதக்கமம் அணிவித்தும் பரிசுகள் வழங்கியும் வாழ்த்துப்பா வாசித்தளித்தும் மாலைகள் அணிவித்தும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஓய்வு பெற்றவர்களைக் கௌரவம் செய்தனர். பலர் இருவரது சேவையையும் புகழ்ந்து பாராட்டினர். இவ்வாசிரியர்கள் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பதும் மிகவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி கல்வி மற்றும் ஏனைய துறைகளில் மாணவர்களை உயர்த்திவிட்டவர்கள் என்பதும் இவர்களிடம் கற்ற பல மாணவர்கள்  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர்நிலைகளில் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.