Wednesday 1 January 2014

2013 ஆம் ஆண்டின் சிறந்த சேவையாளர்கள்


2012 – 2013 ஆம் ஆண்டு எமது சுழிபுரம் கிராமத்திற்கு ஓர் பொற்காலமாகும் .குறிப்பாக சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் “Ridge Way”மண்டபப் புனரமைப்பு, புதிய சிற்றுண்டிச்சாலை, புதிய கணினிக் கூடம், மைதான விஸ்தரிப்பு, நவீன வசதிகொண்ட பாரதி முன்பள்ளி, இவ்வாறான பல வேலைத்திட்டங்கள் நிறைவடைந்த ஓர் சிறந்த நிறைவான காலமாகும். இவ்வேலத்திட்டங்கள் தன்னலமற்ற, சுயநலம் பாராட்டாது கல்விகற்கும் மாணவர்களின் நலன் கருதி செய்து முடிக்கப்பட்ட திட்டங்களாகும்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியும், விளையாட்டு ,கலைத்துறைகளும் வெளிக்கொண்டுவரப்பட்ட மகிழ்ச்சியான காலமாகும்.
எமது கிராமத்தின் மீதும், எமது கல்லூரியின் மீதும் பற்றுக்கொண்ட சிறந்த உள்ளங்கள் தமது வேலைப்பளுவிற்கு மத்தியிலும், பல தடங்கல்களுக்கு மத்தியிலும் ,இரவுபகல் பாராது அயராது உழைத்து வருவது எமது கிராமத்தின் கல்வி வளர்ச்சியை மேலோங்க வைத்துள்ளது. இவ்வாறான சிறந்த உள்ளங்களை உளமாரப் பாராட்ட வேண்டியது எமது சுழிபுரம் வாழ் மக்களினது கடமையாகும்.
எமது கல்லூரியின் அதிபர் திரு. வ . ஸ்ரீகாந்தன் அவர்கள், EDC அமைப்பின் செயலாளர் DR. கண்ணதாசன், பாரதி முன் பள்ளியின் தலைவர் திரு. து.ரவீந்திரன், நாவலர் முன்பள்ளியின் தலைவர் திரு .நிரஞ்சன்,  திரு சிவரூபன், திரு தவராசா போன்றவர்கள் 2013 ஆம் ஆண்டின் சிறந்த நற்சேவையாளர்களாக மதிக்கப்படுகின்றார்கள். இவர்களின் பணி மேன்மேலும் தொடர நாம் யாவரும் தொடர்ந்தும் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவோம் .
இவர்களின் சேவையைப்பாராட்டி அனைத்து விக்ரோறியன்களாகிய பழைய மாணவர்கள், யுகே பழைய மாணவர் ஒன்றியம் யாவரும் இவ்வாண்டின் இறுதியில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .
                              நன்றி
எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !