Friday 3 January 2014

கண்ணீர் அஞ்சலி

சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவனும், ,விக்ரோறியாக்கல்லூரி யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஆரம்பகால உறுப்பினரும், எமது ஒன்றியத்தில் பலகாலம் பொருளாளராக செயல்ப்பட்டு வந்தவருமாகிய திரு. க . நடராஜா அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்துள்ளார்.
திரு .க .நடராஜா அவர்கள் எமது யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் வளச்சிக்காக தனது உடல் நலனையும் பொருட்படுத்தாது எமது ஓன்றியத்திற்காக அயராது உழைத்தவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் எல்லோரையும் வரவேற்கும் சிறந்த பண்பாளர் .நற்சிந்தனையும் ,சேவை மனப்பான்மையும் நிறைந்த இவர் இன்று காலை இறைவனடி சேர்ந்துள்ளார் .இவருடைய இழப்பு எமது ஒன்றியத்திற்கு மட்டுமல்லாது எமது கல்லூரிக்கும் பேரிழப்பாகும் .
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைத்து விக்ரோறியன்கள் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக. அன்னாரின் இழப்பினால் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஒன்றியம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது .
ஆழ்ந்த அனுதாபங்களுடன் விக்ரோறியன்கள் சார்பில்,
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.