Monday 6 January 2014

வதந்திகளை நம்ப வேண்டாம், Victoria College follows the Governments Instructions

அன்பான சுழிபுரம் வாழ் மக்களே வதந்திகளை நம்ப வேண்டாம் !
எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி பற்றி சில தொலைக்காட்சிகளிலும் ,இணையத்தளங்கலிலும் ,பத்திரிகைகளிலும் உண்மைக்குப்புறம்பான செய்திகளை பிரசுரித்து வருவது எமது கல்லூரியின் வளர்ச்சியை பாதிக்க வைக்கக்கூட
ியதாக இருக்கின்றது. உண்மை எதுவென்று தெரியாத நிலையில் தவறான செய்திகளை நம்பவேண்டாம் .எமது கல்லூரி கல்வியிலும் ,விளையாட்டிலும் மற்றும் ஏனைய துறைகளிலும் சிறந்த நிலையில் வளர்ச்சி அடைந்து வருவதால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எங்களது கல்லூரியில் சேர்ப்பதற்காக போட்டிபோட்டு வரும் நிலையில் எமது கல்லூரி நிர்வாகம் 70 புள்ளிகள் பெறும் மாணவர்களுக்கே முதலிடம் என்று அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் ஊட்டப்பாடசாலைகளான ஐக்கியசங்கம் ,பெரியபுலோ,காட்டுபுலம் மற்றும் ஏனைய பாடசாலைகளில் 70 புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு விக்ரோறியாக்கல்லூரியில் கல்வி கற்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
அந்த அடிப்படையில் கல்வித்திணைக்களத்தின் விதியின்படி ஒருபாடசாலையில் நான்கு வகுப்புக்களே இருத்தல் வேண்டும் .ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் அடிப்படையில் 120 மாணவர்களே அனுமதிக்கப்படுவார்கள் .எமது கல்லூரியின் அதிபர் எமது பிள்ளைகளின் நலன் கருதி ஐந்து வகுப்புக்களில் 154 மாணவர்களை அனுமதித்துள்ளார் .மிகுதி சில மாணவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை .இந்நிலையில் எமது கல்லூரி அதிபர் ஏனைய மாணவர்களின் நிலை பற்றி கல்வித்திணைக்களத்துடன் கலத்துரையா டியுள்ளார் .ஆரம்பத்தில் கல்வித்திணைக்களம் அனுமதி கொடுக்கவில்லை .பின் மாணவர்களின் பெற்றோர்கள் கல்வித்திணைக்களத்துடன் போராடியபின் மிகுதி 25 மாணவர்களுக்கும் தற்போது விக்ரோறியாக்கல்லூரியில் கற்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது .
வீண் வதந்திகளை நம்பவேண்டாம் .
*எமது ஒன்றியம் சங்கானை கல்வி மேம்பாட்டு கழகத்தலைவர் திரு .க .சிவானந்தனுடன் இன்று (06/01/2014) தொடர்பு கொண்ட போது கல்லூரியைப் பற்றி வரும் அனைத்து வதந்திகளுக்கும் (குறிப்பாக பதிவு இணையதளத்தில் வந்த செய்திகளுக்கும் ) தனக்கும் எதுவிதமான தொடர்பும் இல்லை என உறுதியாகக் கூறியுள்ளார் . இதை உறுதி செய்ய விரும்புவோர் திரு சிவானந்தனை தொடர்பு கொள்ள விரும்பின் எமது காரியதரிசி திரு தா .கமலநாதன் (0044 7917 801 742) உடன் தொடர்பு கொள்ளவும்.

At the end of the day this is a government school.
If the government authorises us to admit 120 students then our principal can only give admission to 120 students.
If the government authorises us to admit 180 students then our principal can only give admission to 180 students. This is the current situation and we don’t know yet whether we are going to get extra support from the government. (eg Teachers)
No point blaming the principal and college administration. This matter is not in principal’s or college administrations hand.
நன்றி
யுகே பழைய மாணவர் ஒன்றியம்