Monday 10 February 2014

எமது கனவு நனவாகியது

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் இன்று காலை
கல்லூரிக்கு 400 மீற்றர் ஓட்டப்பாதை உள்ள விளையாட்டு மைதானம் கல்லூரி பழையமாணவர்களாலும் தற்போதைய கல்லூரி சமூகத்தாலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்களும் முன்னாள் ஆசிரியர்களும் அதிபர்களும் விசேடமாக கலந்து கொண்டிருந்தனர்.
சுழிபுரம் விக்ரோறியா கல்லூரிக்கு மிக நீண்ட நாள் கனவான 400 மீற்றர் ஓட்டப்பாதையுள்ள மைதானம் கனவாகவே இருந்து வந்த போதும் தற்போது நனவாகி உள்ளமையால் கல்லூரி சமூகம் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளது.