Saturday 8 February 2014

Get together - G.C.E(A/L) 1994,95 & 96 Students

1994,95,96ம் ஆண்டுகளில் எமது கல்லூரியில் கல்வி கற்று க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான சந்திப்பு இன்று மாலை 3.30மணிக்கு றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் 30 மாணவர்களும் இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர். ஒரு நிமிட மௌன வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வை கல்லூரி அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்கள் தொடக்கி வைத்தார். இன்றைய இந்தச் சந்திப்பினை UK பழைய மாணவர் ஒன்றியத்தினைச் சேர்ந்த திரு.க.வினோதன் அவர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தார். இவருடன் திரு.ச.ஜெயக்குமார், திரு.நா.ரமணன், திருமதி.ஜெகதீஸ்வரி சுதர்சன் ஆகியோரும் இணைந்து செயற்பட்டிருந்தனர். கலந்து கொண்ட அனைவரும் சுய அறிமுகம் செய்து கொண்டதுடன் தற்போதைய தமது தொழில், குடும்ப நிலை போன்ற விடயங்களையும் கல்லூரி அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பரிசுப் பொருட்களையும் வழங்கி கௌரவித்தனர். கலந்து கொண்டவர்கள் தம்மை கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினகளாக பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களையும் நிரப்பி வழங்கினர். இச் சந்திப்பின் நோக்கம், அடுத்த கட்டச் செயற்பாடுகள் குறித்து திரு.க.வினோதன் விளக்கமளிக்க அவையோரும் தமது கருத்துக்களை பரிமாறினர். மாலை 6.30மணியளவில் திருமதி.ஜெகதீஸ்வரி சுதர்சனின் நன்றியுரையுடன் இச் சந்திப்பு நிறைவடைந்தது.