Monday 12 May 2014

New Principal

எமது கல்லூரியின் அதிபர் திரு..ஸ்ரீகாந்தன் அவர்கள் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து புதிய அதிபராக  ருமதி.சத்தியகுமாரி சிவகுமார் அவர்கள் வடமாகாணக்கல்வியமைச்சின் செயலாளரால் 
நியமிக்கப்பட்டுள்ளார்மானிப்பாய் சோதி வேம்படி வித்தியாசாலையின் அதிபராக கடமையாற்றிய இவர் வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகக் கொண்டவர்இன்று காலை புதிய அதிபர் தனது கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்சிவகாமி சமேத நடேசப் பெருமானின் விஷேட பூஜைகளில் கலந்து கொண்ட பின் பதில் அதிபர் திரு செ.சிவகுமாரன் அவர்களால் ஆசிரியர் மாணவர்களுக்கு புதிய அதிபர் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து முன்னாள் அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் வாழ்த்தி ஆசியுரையாற்றினார். புதிய அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமார் உரையாற்றிய பின் ஆசிரியர்கள் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பூரணகும்பம் மாலை மரியாதையுடன் அவர் வரவேற்கப்பட்ட போது பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாக சபையினர் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாக சபையினர் வருகை தந்திருந்தனர்.