Friday 23 May 2014

எமது பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கு

கடந்த புதன்கிழமை (21.05.2014) அன்று எமது பாடசாலையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. சிவபாதசுந்தரனார் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்,  எதிர்வரும் 2016ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள சுமார் 50 மாணவர்கள் பங்குபற்றிப் பயன்பெற்றனர்.
யாழ் மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் DR. செ. கண்ணதாசன் இக்கருத்தரங்கினை நடாத்தினார். 
கல்வி கற்கின்ற முறைகள், ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ளும் முறைகள்;  குறிக்கோளொன்றை அமைத்து அதைநோக்கி முன்னேறுதல் மற்றும் சுய ஆய்வு போன்ற விடயங்கள் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
மாணவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக இக்கருத்தரங்கு விளங்கியமை குறிப்பிடத்தக்கது.