Sunday 15 June 2014

Girls Cricket Champions - 2014

எங்கள் கல்லூரியின் பெண்கள் துடுப்பாட்ட அணியினர் மாகாண மட்டப் பாடசாலைகளுக்கிடையிலானபோட்டிகளில் வெற்றி கொண்டு மாகாணச் சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இம்முறைமாகாண மட்டத் துடுப்பாட்டப் போட்டிகள் ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. 

2014ம் ஆண்டில் இதுவரை நடைபெற்ற சகல போட்டிகளிலும் இவ்வணி வெற்றி பெற்றமை
குறிப்பிடத்தக்கதாகும்.2010ம் ஆண்டு மத்திய கல்வியமைச்சின் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில்பெண்களுக்கான துடுப்பாட்டமும் ஒன்றாக இணைத்துக்கொள்ளப்பட்டது. அவ்வருடத்திலிருந்து விக்ரோறியா பெண்கள் துடுப்பாட்ட அணி மாகாண மட்டத்தில் தொடர்ச்சியாக முதலிடம் பெற்றுவருகின்றது. 2010ம் ஆண்டு திருமதி.அ.வேலுப்பிள்ளை அவர்கள் அதிபராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட பெண்களின் துடுப்பாட்ட அணி தொடர்ந்து திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்கள் அதிபராக பணியாற்றும் காலங்களிலும் முதன்மை வெற்றிகளைப் பெற்று இவ்வருடம் ஐந்தாவது தடவையாக சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 2010ம், 2011ம் ஆண்டுகளில் செல்வி.சி.ஜெயரஞ்சனி அவர்களும் 2012ம் ஆண்டில் செல்வி.மா.கோபிகா 
அவர்களும் 2013ம் ஆண்டில் செல்வி.பா.ரஜிதா அவர்களும் 2014ம் ஆண்டில் செல்வி.சி.டிலானி அவர்களும் அணித்தலைவர்களாகச் செயற்பட்டுள்ளனர். விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியராக திரு.செ.சிவபாலசுந்தர் அவர்களும் தொடர்ந்து திரு.நா.திருக்குமாரன், திருமதி.ஜெயகௌரி ஆதித்தன் ஆகியோரும் தற்போது திரு.சி.சிவச்செல்வன் அவர்களும் இவ்வணிகளை வழிப்படுத்தி வந்துள்ளனர். 

அன்றிலிருந்து தொடர்ச்சியாக “விக்ரோறியன்ஸ்“ திரு.ந.சிவரூபன், திரு.தி.சுஜிர்தன் ஆகியோர் பயிற்றுநர்களாக சிறந்த பயிற்சிகளை வழங்கிவருகின்றனர். இவ்வணியினர் மாவட்ட, மாகாண, தேசிய நிலைகளில் போட்டிகளில் பங்குகொள்ளும் போது கல்லூரி ஆசிரியர்கள் இவர்களைப் பொறுப்பேற்று அழைத்துச் சென்று வெற்றிகளைப் பெற உதவுவார்கள். இவ் வீரர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள பழைய மாணவர்கள் சத்துணவுகள், போக்குவரத்து வசதிகள், கோலவுடைகள் போன்றவற்றை தேவையறிந்து வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். 2012ம் ஆண்டில் விக்ரோறியாக் கல்லூரியின் பெண்கள் துடுப்பாட்ட அணி தேசிய மட்டத்தில் 2ம் இடத்தை வென்றமை குறிப்பிடத்தக்கதாகும். இம்மாணவிகள் பெறும் தொடர்ச்சியான வெற்றிகளால் உலகெங்கும் பரந்து வாழும் விக்ரோறியன்கள் 
பெருமைப்படுவதுடன் விக்ரோறியா அன்னையும் மகிழ்ச்சியடைகின்றாள்.

இவ் வருடம் வெற்றி பெற்ற அணியினர் கல்லூரிச் சமூகத்தினால் சிறப்பான முறையில் மதிப்பளிக்கப்பட்டனர்.