Tuesday 1 July 2014

Visit - Mr&Mrs.N.T.V.Rajalingam

அவுஸ்ரேலியாவிலிருந்து தாய் நாட்டிற்கு வருகை தந்த எமது சிரேஸ்ட பழைய மாணவர்களான திரு.திருமதி.N.T.V.இராஜலிங்கம் தம்பதியினர் கல்லூரிக்கு வருகை தந்து எமது புதிய அதிபருடன் கல்லூரியின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்கள். முன்னாள் அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்கள் தம்பதியினரை அதிபர் திருமதி.ச.சிவகுமார் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரியை சுற்றிப் பார்வையிட்ட NTVR தம்பதிகள் தற்போது அமைக்கப்பட்டு வரும் மஹிந்தோதய தொழில்நுட்பக் கூடம் பற்றியும் தகவல்களை கேட்டறிந்து கொண்டனர். தான் தவணை தோறும் மாணவர்களுக்கு வழங்கும் கற்றலுக்கான ஊக்குவிப்பு உதவித்தொகையினையும் அதிபரிடம் 
கையளித்ததுடன் கல்லூரியின் தேவைகள் பற்றியும் கலந்துரையாடினார்கள். அத்துடன் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள சில மாணவர்களையும் சந்தித்து கருத்துப் பரிமாறிக் கொண்டனர்.