Tuesday 16 September 2014

சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி பழைய மாணவர் சங்க - கலை நேரம் 2014‏ (Australi OSA News)

சுழிபுரம் விக்டோரியா கல்லுரி பழைய மாணவ சங்க மெல்பேன் கிளையின் கலை நேரம் என்னும் நிகழ்வு கடந்த 14/09/2014 ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு ரோவில் உயர் கல்லுரி மண்டபத்தில் நடைபெற்றது.மங்களவிளக்கை கலை ஆசிரியர்கள்ளான திரு ரவி ரவிச்சந்திரா திருமதி மீனா இளங்குமரன்,திரு அகிலன் சிவானந்தன் மற்றும் பழைய மாணவனாகிய திரு அமுதலிங்கம் அவர்கள் ஏற்றி வைத்து விழாவை ஆரம்பித்து வைத்தார்கள்.வரவேற்புரை திருமதி உமாரூபன் ஆற்றினார்.முதலில் திரு ரவி ரவிச்சந்திரா அவர்களின் நெரியாக்கையில் தாளவாத்தியமும்,அடுத்து மீனா இளங்குமரனின் நடனாலையா பாடசாலை மாணவர்களின் பரதநாட்டியமும் அதனை தொடர்ந்து திரு அகிலன் சிவானந்தன் அவர்கள் தனது இசை வேள்வியை மேல்நாட்டு வாத்தியங்களுடன் வித்தியாசமான இசை நிகழ்வை நடத்தினார்.இறுதியில் ருக்சிகா இளங்குமரன் இந்நிகழ்வு எதற்கு நடக்கின்றது என்பதை தனது நடனம் மூலம் வந்த மக்களுக்கு விளக்கம் அளித்தார்.கல்லூரியின் பழைய மாணவர்களான திரு ராஜேந்திரம்,திரு ஸ்ரீகுமார் ,திருமதிகள் உசா கொவ்ரிஷ்வரன்  ,ரோகினி திருநீலகண்டன் ,ரதி குமார் தேவி ராஜேந்திரம் ஆகியோர் ஆசிரியர்கள்,மாணவர்களை விருதுகள் வழங்கி  கௌரவித்தார்கள்.திருமதி தேவி ராஜேந்திரம் அவர்களின் நன்றி உறையுடன் கலை நேர நிகழ்வு நிறைவு பெற்றது.

See Photos

You tube Video