Tuesday 16 September 2014

மணிவிழா-மலர் வெளியீடு‏

விக்டோரியா கல்லூரியின் பழைய மாணவனும் ஆசிரியரும் அதிபருமாக பணியாற்றி  10-03-2014 இல் ஒய்வு பெற்ற அதிபர் பிரம்மஸ்ரீ வரதராஜா ஸ்ரீகாந்தன் அவர்களின் மணி விழா மலர் வெளியீட்டு நிகழ்வு 14-09-2014 அன்று ஞாயிறு  பி.பகல் 2: 45 மணியளவில் விழா நாயகனையும் அவர் தம்  பாரியரையும் கல்லூரியின் அலுவலக முன்றலில் இருந்து பாண்ட் வாத்திய அணி வகுப்புடன் விருந்தினர்கள் குடும்பத்தினர் கல்வி சமூகத்தினர் ஆசிரியர்கள் கல்வி சேவை செய்தவர்கள்    மாணவர்கள் பெற்றார்கள் என பலரும் புடை சூழ வெளியீட்டு விழா மண்டபமான ரிட்ஜவே மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு வாயில் மங்கள விளக்கேற்றபட்டு சபையோரின் கர கோஷத்துடன் விழா மண்டபத்திற்குள் பிரவேசிக்க மங்கள விளக்கேற்றல் ஆரம்பமாகியது. 
         சிவஸ்ரீ . சபா. வாசுதேவ குருக்களினை தொடர்ந்து வண. பிதா. ஜேசுதாஸ் அடிகளார், திரு .ஆ .ராஜேந்திரன் , திரு ச .சிவனேஸ்வரன் பேராசிரியர் தேவராஜா, திருமதி.அ. வேலுபிள்ளை, நூலகர் விஜயகுமாரினை அடுத்து நாயகனின் தீபமேற்றலுடன் திருமதி.ப.முகுந்தன் அவர்களின் இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமகின.

See Photos