Thursday 16 October 2014

தங்கப்பதக்கம் பெற்ற சாதனை மாணவிக்கு வாழ்த்துக்கள்

அகில இலங்கை ரீதியில் 2014 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்டத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் ஈட்டி எறிதலில் எமது விக்ரோறியாக்கல்லூரி மாணவி செல்வி ரஜிதா –பாலச்சந்திரன் முதலாம் இடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தினை வென்று  சாதனை படைத்துள்ளார். இம்மாணவிக்கு எமது பழைய மாணவர் ஒன்றியம் மிகுந்த பாராட்டுக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றது. 
எமது கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக மாணவி ரஜிதா அவர்கள் பெற்றுத்தந்த இந்தப் புகழ் வரலாற்று ஏட்டில் பதியப்பட வேண்டிய நிகழ்வாகவும், இம் மாணவி கல்லூரியின் சகல  விளையாட்டு துறைகளிலும்  பங்கு கொண்டு  வீராங்கனையாக திகழ்ந்து வெற்றிக்கு  உறுதுணையாக இருப்பதையிட்டு எமது ஒன்றியம் பெருமை கொள்கின்றது 
மாணவி ரஜிதா –பாலச்சந்திரன் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கல்லூரிச் சமூகம், அதிபர், ஆசிரியர்கள், மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் குறிப்பாக எமது கல்லூரி மாணவர்களின் வெற்றிக்காக அயராது பாடுபட்டு வரும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் விக்ரோறியன் திரு .சிவரூபன் அவர்களுக்கும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள். 
மேலும் பல மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு சென்று பல விருதுகளைப் பெற வேண்டும். அதற்கு எமது ஒன்றியம் என்றும் உறுதுணையாக இருக்கும். 

நன்றி.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்

See Photos