Sunday 10 May 2015

வாரியும்.. சேவையாளனும்

கொழும்பு கம்பன் கழக தலைவர் கம்பவாரிதி ? 5-05-2015  அன்று 
எழுதியது !!!!!!!!!!!!
1) நாட்டைவிட்டு ஓடிய புலம்பெயர்ந்த எவரும் தாயகத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கமுடியாது. மீறி, யாராவது எமக்கு ஆலோசனை தந்தாலும் நாம் அதை ஏற்கப்போவதில்லை.
2) இனிவரும் புலம்பெயர் தலைமுறையினர் ஈழத்தை பொறுத்தவரை பார்வையாளர்களாக இருந்துவிட்டுப்போகட்டும், பங்காளிகளாக முடியாது.
3) கம்பன் கழகம் ஒரு காலத்தில் அரசியலில் ஈடுபடாதது உண்மைதான். ஆனால், “ஜனநாயகம் தளிர்த்திருக்கும் புதிய இலங்கையில்” எமது கழகம் இனி அரசியலும் பேசும்.
4) கம்பன் கழகத்தை கொழுத்த கழகமாக வளர்;த்துவிட்டவர்களும் குறைந்த பட்சம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் என்ற தகுதியுடையவர்கள் மட்டுமே, கம்பன் கழகத்தை கேள்வி கேட்கமுடியும்.
5) எனது வருகைக்காக புலம்பெயர்ந்த காதிதப்புலிகள் உட்பட அனைவரும் தவமிருக்கவேண்டும். நான் வருவது புலம்பெயர்ந்த மக்களுக்குத்தான் பெருமையே ஒழிய எனக்கல்ல.

வாரிக்கு ஓர் சேவையாளனின் பதில் ...............


கம்பன் கழக தலைவரே 
புலம் பெயர்ந்த மக்கள் இல்லாவிட்டால் சிங்கள அரசாங்கம் மொத்த தமிழ் மக்களையும் அழித்திருப்பார்கள். எங்கள் குரலால்தான் இன்று ஐநா சபை மற்றும் உலக நாடுகள் இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்ததுக்கு நடவடிக்கை எடுகின்றார்கள் மற்றும்,உங்களுக்கு தெரியுமா எத்தனை ஆச்சிரமங்கள் அநாதை குழந்தைகள் இல்லம் எல்லாம் வெளிநாட்டு மக்கள்ளால் நடத்தப்படுகின்றது ஒருக்கால் கிளநொச்சி,முல்லைதீவு,மன்னார் இல் உள்ள இல்லங்களுக்கு சென்று கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் புலம் வாழ் மக்களின் உதவி பற்றி,மற்றும் வெளிநாட்டில் இருக்கும் பழைய மாணவ சங்கங்களின் உதவியால் உங்கு படிக்கும் மாணவர்கள் எவளவு பயன் பெறுகின்றார்கள்,உதாரணதுக்கு எங்கள் பாடசாலையான சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் 20 தந்தை இழந்த மாணவர்ளின் முழு செலவும் எம்மால் பார்க்கப்படுகின்றது,அது போல் யாழ் பரியோவான் கல்லுரி 100 வன்னி மாணவர்களை பொறுப்பெடுத்து பார்க்கின்றார்கள்.தமிழர் புனர்வாழ்வு கழகம் மற்றும் ஆஸ்திரேலியா மருத்துவ சங்கம் பெரிய அளவில் தாயகத்தில் உதவிகளை செய்கின்றார்கள் இப்படி பல,புலம்பெயர்ந்த அமைப்புக்களால் எம்மக்கள் என்னும் உயிர் வாழ்கிறார்கள், புலம் பெயர்ந்து வாழும் மக்கள் உதவி செய்யாமல் நீங்கள் சொன்ன மாதிரி பார்வையாளர்களாக இருந்தால் போரில் பாதித்த மக்கள் பசியால் இறந்திருப்பார்கள்,உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் நாட்டு ஜனாதிபதிக்கு மகுடம் அணிந்ததால் எம்மக்களுக்கு என்ன நன்மை அல்லது உங்கள் சங்கத்துக்கு எதாவது கிடைத்ததா (பணம்)மற்றும் நீங்கள் இங்கு வாறதால் எங்களுக்கு பெருமை என்ன ? எங்களுக்கு பெருமை தர நீங்கள் கடவுளா ? நீங்கள் வாறதால் புலம் வாழ் மக்களுக்கு பண செலவு அந்த பணத்தை எம்மக்களுக்கு அளிக்கலாம்,ஆகவே இனிமேல் தயவு செய்து வெளிநாடுகளுக்கு வரவேண்டாம் நாட்டில்லிருந்து வருங்கால தலைவர்களுக்கும் மகுடம் சூட்டி உங்கள் சங்கத்தை வளருங்கள்,
வாழ்க வளமுடன்.
இப்படிக்கு 
செந்தில் 
மெல்பேன் ஆஸ்திரேலியா