Wednesday 6 May 2015

நிலை குலைந்து நிற்கின்றோம்

விக்டோரியா அன்னையின் பாசமிகு மகனை இழந்து தவிக்கிறோம். அமரர் கு சின்னத்தம்பி மிகவும் மூத்த பழைய மாணவன் ஆவார். பலகாலம் மலேசியாவில் வாழ்ந்து எமக்குப் பெருமை சேர்த்தவர்.இவர் சிறந்த உதைபந்தாட்ட வீர்ராவார்.  உதைபந்தாட்டத்தில் இவரது "உதை" க்கு எதிரணியினர் நடுங்குவர்.
1970,1980 களில் எமது கல்லூரி சார்பாக "கோல்" அடிக்கும் ஒவ்வொரு வீரருக்கும் மைதானத்தினுள் ஓடி பரிசில் வழங்குவார். போட்டிக்கு முன்பும்,  போட்டி முடிந்ததும் வீரர்களை அழைத்து ஆலோசனைகள் வழங்குவார். இவரது அன்பான கண்டிப்பும் சிம்மக்குரலும்  எம் விக்டோரியா   அன்னையின் புதல்வர்களை விளையாட்டில் மட்டும் அன்றி கல்வியிலும் சிறந்த முறையில் வழி நடத்தியது.
இவரது புதல்வர்களும் எமது கல்லூரியின் பழைய மாணவர்களே. இவரது இழப்பு எவராலுமே ஈடுசெய்யப்பட முடியாதது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திக்கிறோம்.

தா.கமலநாதன்
யூ கே பழைய மாணவர் ஒன்றியம்
(OSA-UK)