Friday 18 August 2017

செ.சிவகுமாரன் ஞாபகார்த்த விருது

எமது விக்ரோறியாக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் அமரர் செல்லையா சிவகுமாரன் (முன்னாள் உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர், காங்கேசன்துறை சாரணமாவட்டம்) அவர்களின் ஞாபகார்த்தமாக அவரிடம் கல்வி பயின்று 1994 ஆம் வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஞாபகார்த்த விருதுகள் வழங்க முன்வந்துள்ளனர். தமது ஆசிரியர் மீது கொண்டுள்ள மாறா அன்பும் மதிப்பும் இவ்விருது வழங்கலின் அடிப்படையாக உள்ளது. 
      1. சிறந்த சாரணியருக்கான விருது (Best Scout Award)
      2. சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது (Best Cricketer Award)
இவ்விருதுகள் எதிர்வரும் 05.09.2017 செவ்வாய்க்கிழமை பி.ப 3 மணிக்கு இம்மாணவர்களால் கல்லூரி அதிபரிடம் சிவபாதசுந்தரனார் கேட்போர் கூடத்தில் நடைபெறும் ஒன்றுகூடலின் போது கையளிக்கப்படவுள்ளன. 

   இந்நிகழ்வில் அமரர் அவர்களின் குடும்பத்தினர், கல்லூரி அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் 1994 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்



.

K