Tuesday 29 May 2012

மனதில் நீங்காது நிற்பவர்

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் திருமதி. இலக்குமிப்பிள்ளை.சிவசுப்பிரமணியம் அவர்கள் அன்பாக எல்லோராலும் ஆசைப்பிள்ளை ஆசிரியர் என்று அழைக்கப்படுவார் .இவர் தனது எழுவதாவது வயதில் இறைவனடி சேர்ந்துள்ளார் .என்பதை அறிந்த அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் எல்லோருக்கும் பேரிழப்பாக உள்ளது .ஆசைப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் கணித ஆசிரியராக இருந்த காலத்தில் அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பலர் இன்று உலகெங்கும் நல்ல துறைகளில் வேலைபார்த்து வருகிறார்கள் .
அவர் கல்லூரி ஆசிரியராக இருந்த கால கட்டத்தில் தனது கடமையை நல்ல முறையில் செய்து எல்லோரிடமும் பல பாராட்டுக்களையும் பெற்ற ஆசிரியர் ஆவார் .அன்னாரின் மீளாத்துயிலுக்காகவும் ,அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பழைய மாணவர்கள் ,யுகே பழைய மாணவர் ஒன்றியம் யாவரும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொள்கின்றார்கள் .
அனுதாபங்களுடன் யுகே பழைய மாணவர் ஒன்றியம் .
29/05/2012