Saturday 11 August 2012

30,000 Rs Donation

நோர்வேயில் வசித்து வரும் எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர் திரு.திருமதி.செல்வக்குமார் அவர்கள் எமது தாய் நாட்டிற்கு சென்றபோது தான் கல்வி கற்ற கல்லூரிக்கு சென்று கல்லூரியின் நிலவரங்களை அறிந்து கொண்டதுடன் 30,000 ரூபா பணத்தொகையை நன்கொடையாகக் கல்லூரியின் அபிவிருத்திக்காக வழங்கியுள்ளார். அத்துடன் திரு .திருமதி.செல்வக்குமார்அவர்கள் கல்லூரிக்கான மாணவ முதல்வர்களுக்குரிய சின்னம் சூட்டும் விழாவிற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அவர்களுக்குரிய சின்னங்களை வழங்கினார்கள். அவரின் இச்சேவையைப் பாராட்டி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழையமாணவர்கள் எல்லோரும் தமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்கள்.
புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் எமது விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர்கள் தமது சொந்தங்களை பார்ப்பதற்காக தாய் நாட்டிற்குச் செல்லும் பொது நீங்கள் கல்விகற்ற உங்கள் புனிதத் தளமாகிய உங்கள் விக்ரோறியாக்கல்லூரிக்கு சென்று கல்லூரியின் செயற்ப்பாடுகளை அறிந்து கொள்வதுடன் கல்லூரியின் அபிவிருத்திக்கு உங்கள் உதவிகளைச் செய்ய விரும்பின் கல்லூரி நிர்வாகத்துடன் மட்டும் தொடர்பு கொண்டு உங்கள் நன்கொடைகளை வழங்கவும்.உங்கள் நன்கொடைகளின் விபரங்கள் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் இணையத்தளத்தில் நீங்கள் விரும்பினால் சிறப்புச் செய்தியாக வெளியிடப்படும்.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.