Friday 17 August 2012

நெல்லியான் கிராமமும் பழைய மாணவர்களின் வீடுகளும்

இலங்கையின் வடபால் அமைந்த சுழிபுரத்தே நெல்லியான் என்பதோர் அழகிய கிராமமாகும். வயல்களால் சூழப்பட்ட இக்கிராமத்தினில் சுமார் 25 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். துரதிஷ்டவசமாக கடந்த மூன்று தசாப்தங்களாக எதிர்கொண்ட யுத்த சூழ்நிலை காரணமாக இக்கிராம மக்கள் 1995 தொடக்கம் இடம்பெயர்ந்தே வாழ்ந்து வந்தனர். மேலும் இக்கிராமம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதால் கடந்த 27 வருடங்களாக யாருமே மீளக்குடியேற முடியாத நிலை காணப்பட்டது. கிராமம் முழுவதுமே பற்றைகள் வளர்ந்து காடாகக் காட்சியளிக்கிறது. கூரைகளற்ற வீடுகள் அநாதரவாக் காட்சியளிக்கின்றன.தற்பொழுது முதல் ஆளாக வைரவர் மீளக்குடிஏறுகின்றார்.
இக்கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்து வாழும் குடும்பங்கள் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஆவார்கள்.
See Photos
பழைய மாணவர்களின் வீடுகள்