Sunday 24 November 2013

G.C.E.O/L Exam Admission Card Issuance

எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை எமது மாணவர்களுக்கு வழங்கி ஆசி கூறும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை சிவபாதசுந்தரனார் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் முழு அளவில் வருகை தந்திருந்தனர். கல்லூரி அதிபர், பிரிவுத்தலைவர்கள் திரு.நா.திருக்குமாரன், திருமதி.நே.தனபாலசிங்கம் ஆகியோர் மாணவர்களுக்கு பரீட்சை தொடர்பான அறிவுரைகளை எடுத்துக் கூறியதுடன் தமது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் வழங்கினர்.  உயர்புள்ளி பெற்ற மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசுகளும் இதன்போது கொடுக்கப்பட்டன.