Thursday 27 February 2014

மரண அறிவித்தல் கிருஸ்ணபிள்ளை கணேசன்

இறப்பு
2014-02-24  

காளுவன், சுழிரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை கணேசன் நேற்று முன் தினம்(24.02.2014) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை தெய்வானைப் பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அராலியைச் சேர்ந்த தர்மலிங்கம்நாகம்மா தம்பதியரின் அன்பு  மருமகனும், மனோன்மணியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் நடராசா (லண்டன்), காலஞ்சென்ற தவராசா மற்றும் பூபதி (சுவிஸ்), ஞானாம்பிகை, அன்னபாக்கியம், காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் பாக்கியலச்சுமி, காலஞ்சென்ற விஜயபாலன் மற்றும் செல்வராசா (சுவிஸ்), காலஞ் சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், றஞ்சிதமலர் (ஆசிரியர், உடுவில் மகளிர் கல்லூரி),மாலினி(ஆசிரியர், யா/சுழிபுரம்  விக்ரோரியாக் கல்லூரி, சுழிபுரம் வடக்கு ஆறுமுகம் வித்தியாசாலை), சுமதி (கனடா),மனோகரன் (ஆசிரியர்,மு/இருட்டுமடு தமிழ் வித்தியாலயம்,உடையார்கட்டு),தர்மினி ஆகியோரது பாசமிகு தந்தையும், சிவகுமார் (சிவகுமார் ஸ்ரோர்ஸ், மானிப்பாய்), மனோச்குமார்(மனோ போட்டோ சுழிபுரம்), நந்தராஜ் (கனடா), நந்தினி, கிருஸ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனும்,மதுசன், மதுசாயினி, டிரோசினி, டிரோசன்,மேருசன், கிருசாந்,கேசாயினி, டிசானன், உசாங்கன், தஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (27.02.2014) வியாழக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.