Saturday 19 April 2014

Volley ball Champions 2014

யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டிகள் நேற்றும் இன்றும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றன. விக்ரோறியாக்கல்லூரியின் 17வயதுப் பிரிவினர் சங்கானைக் கல்விக் கோட்டம், வலிகாமம் கல்வி வலயம் என்பவற்றின் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டிகளில் முதன்மை வெற்றிகளைப் பெற்று மாவட்டப் போட்டிகளில் கலந்து கொண்டனர். பலம் வாய்ந்த பல அணிகளுடன் மோதி தொடர் வெற்றிகளைப் பெற்ற நிலையில் புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரியுடன்  இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். மிக வறுவிறுப்பான போட்டியில் புத்தூர் சோமாஸ்கந்தா அணியையும் வெற்றி கொண்டு 2014ம் ஆண்டுக்கான யாழ் மாவட்ட பாடசாலைகளின் 17வயதுப் பிரிவுச் சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். விளையாட்டுத் துறை முதல்வர் திரு.சி.சிவச்செல்வன், கரப்பந்தாட்டப் பொறுப்பாசிரியர் திரு.க.திருக்குமாரன், பயிற்றுநர் திரு.செந்தூரன் ஆகியோரின் சிறப்பான வழிப்படுத்தலில் பெறப்பட்ட இவ்வெற்றி மூலம் அடுத்த மாதத்தில் மாகாண மட்டப்  பாடசாலைகளுடன் நடைபெறவுள்ள கரப்பந்தாட்ட போட்டியில் இவ்வணியினர் கலந்து கொள்ள தெரிவாகியுள்ளனர்.