Sunday 4 May 2014

All Island School Laboratory Competition - 2014

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடங்களின் செயற்பாடுகளை மதிப்பீடு (Evaluation of School Laboratories) செய்யும் போட்டியில் எமது கல்லூரியின் இரசாயன ஆய்வுகூடம் மாகாண மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டு தேசிய மட்டத்திலான மதிப்பீட்டுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இப் போட்டியினை ஒத்தியல்பு மதிப்பீட்டுக்கான இலங்கை தராதர அங்கீகார சபை (SriLanka Accreditation Board for Conformity Assesment) நடாத்துகின்றது.

மாகாண மட்டத்தில் வடக்கு மாகாணப் பாடசாலைகளிலிருந்து மூன்று ஆய்வுகூடங்கள் தெரிவாகியுள்ளன. இதில் எமது பாடசாலையின் இரசாயன ஆய்வுகூடமும் ஒன்றாகும். சென்ற வாரம் வருகை தந்த தேசிய மட்ட மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வுகூடத்தில் மாணவர்கள் மூலம் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் பதிவேடுகள், செய்முறைப் புத்தகங்கள் (Practical Books) போன்றவற்றையும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இரசாயனவியல் ஆசிரியர்களான செல்வி.கு.தாரணி, திரு.கு.கண்ணதாசன் ஆகியோரும் ஆய்வுகூட உதவியாளர் திரு.தா.பகீரதன் அவர்களும் இதற்கான ஒழுங்கமைப்புக்களைச் செய்திருந்தனர்.