Saturday 3 May 2014

நாவுக்கரசர் குருபூசை தினம்

தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தில் வருடாந்தம் திருநாவுக்கரசர் குருபூசை தினம் எமது கல்லூரி இந்து மாணவர் மன்றத்தின் அனுசரணையுடன் கொண்டாடப்படுகின்றது. வழமை போல் இம்முறையும் திருநாவுக்கரசர் குருபூசை சிவபூமி முதியோர் இல்லத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாயின. கல்லூரி ஆசிரியர்கள் திரு.தி.தவரத்தினம், திருமதி.ம.சுவேந்திரன் ஆகியோரின் உரையினை் தொடர்ந்து மாணவர்களின் பேச்சு, நடனம், பண்ணிசை, இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்துமன்றத் தலைவன் செல்வன்.இ.நிரோஜன், மன்றப் பொறுப்பாசிரியர் திரு.இ.இராஜமுகுந்தன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்திருந்தனர். ஓய்வுநிலை அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். சிவபூமி அறக்கட்டளை செயலாளர் “விக்ரோறியன்“ திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் (கோட்டக் கல்விப் பணிப்பாளர்) நன்றியுரை கூறினார். முதியோர் இல்லத்தில் வாழும் பெரியோர்கள், தாய்மார்கள், சர்வோதய நிறுவனச் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

See More Photos