Thursday 1 May 2014

Under 17 Netball

யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் சென்ற வாரம் 
நெல்லியடி மத்திய கல்லூரி மைடானத்தில் நடைபெற்றன. எமது கல்லூரியின் 17வயதுப் பிரிவினர் 
இப்போட்டிகளில் கலந்து கொண்டு பிரபலமான கல்லூரிகளை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குள் 
நுழைந்தனர். இறுதிப்போட்டி அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்துடன் நடைபெற்றது. மிக 
விறுவிறுப்பான இப்போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் வெற்றி பெற்றது. மாவட்ட 
மட்டத்தில் விக்ரோறியாக்கல்லூரி 2ம் இடம் பெற்று மாகாணமட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளும் 
தகுதி பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக 17 வயதுப் பிரிவினர் மாகாண மட்டப் போட்டியில் பங்குகொள்ளவுள்ளனர். விளையாட்டுத்துறை முதல்வர் திரு.சி.சிவச்செல்வன், பொறுப்பாசிரியர்கள் 
திருமதி.பா.சுப்பிரமணியம், திருமதி.வா.சிவலோகநாதன், பயிற்றுநர் “விக்ரோறியன்” கஜேந்திரன் ஆகியோர் கல்லூரி அணியினை நெறிப்படுத்தினர்.