Monday 26 May 2014

Volley Ball Champions - 2014

வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் முல்லைத்தீவு,

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி மைதானத்தில் சென்ற சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்றது.மாவட்டச் சம்பியன்களான விக்ரோறியாக் கல்லூரியின் 17 வயதுப் பிரிவினர் இப்போட்டிகளில் பங்கு கொண்டனர். தாம் கலந்துகொண்ட சகல போட்டிகளிலும் வெற்றி கொண்ட எமது அணி இறுதி ஆட்டத்தில் புத்தூர் சோமாஸ்கந்தாக் கல்லூரியை எதிர்த்தாடியது. 

மூன்று சுற்றுக்களைக் கொண்ட இப் போட்டியில் எமது வீரர்கள் இரண்டு நேர் சுற்றுக்களை வெற்றி கொண்டு மாகாண சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக மாகாண சம்பியன்களான 17 வயது அணியினர் தொடர்ந்து தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர். விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.சி.சிவச்செல்வன், கரப்பந்தாட்டப் பொறுப்பாசிரியர் திரு.க.திருக்குமரன்,பயிற்றுநர் திரு.செந்தூரன் மற்றும் திரு.த.தவரத்தினம் ஆசிரியர் ஆகியோர் இப்போட்டிகளின் போது வீரர்களை வழிப்படுத்தினர்.