Tuesday 10 June 2014

வெற்றியாளர்கள் கௌரவிப்பு‏

மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பெண்களுக்கான துடுப்பாட்டம் மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற எமது கல்லூரி வீராங்கனைகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று கல்லூரியில் இடம்பெற்றது. 

இதன்போது அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த கல்லூரியின் பழைய மாணவர் திரு.அ.சதானந்தமனுநீதி அவர்களும் அவரது புதல்வி செல்வி.திலகா சதானந்தமனுநீதி அவர்களும் அவர்களின் குடும்ப நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தமை விசேட அம்சமாகும். கல்லூரியைப் பார்வையிட வந்த இவர்கள் இன்றைய நிகழ்வுகளில் வீராங்கனைகளை கௌரவித்து சான்றிதழ்களையும் வெற்றிக் கேடயங்களையும் தமது கரங்களால் வழங்கி மதிப்பளித்தனர். 

கல்லூரி முதல்வர் திருமதி.ச.சிவகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுகளின் போது முன்னாள் அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்களும் கலந்துகொண்டார். திரு.அ.சதானந்தமனுநீதி, 

திரு.வ.ஸ்ரீகாந்தன், பிரதியதிபர் திரு.செ.சிவகுமாரன் ஆகியோர் வீராங்கனைகளைப் பாராட்டியும் வாழ்த்தியும் உரையாற்றினர். திரு.அ.சதானந்தமனுநீதி அவர்கள் தமது உரையில் கல்லூரியின் சகல துறை வளர்ச்சியையும் முன்னாள் அதிபர்கள் ஆற்றிய மகத்தான சேவைகளையும் குறிப்பிட்டதுடன் புதிய அதிபரிடமிருந்தும் உயரிய பணியை எதிர்பார்ப்பதாகவும் அவருக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராயிருப்பதாகவும் குறிப்பிட்டார். கல்லூரி வாசலிலிருந்து வீராங்கனைகள் அழைத்து வரப்பட்டு கௌரவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.