Monday 15 June 2015

விக்ரோறியா கல்லூரி அணிகள் வடமாகாண சம்பியன்களாக

 விக்ரோறியா கல்லூரி அணிகள் வடமாகாண சம்பியன்களாக தெரிவாகியுள்ளனர்  19 வயதிற்குட்பட்ட பெண்கள் துடுப்பாட்ட சம்பியனாகவும்  17 வயதிற்குட்பட்ட பெண்கள் வலைப்பந்தாட்ட அணியினர் வடமாகாண சம்பியனாகவும் வலைப் பந்த  19 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட ஆண் கள் அணியினர் மூன்றாம் இடத்தினையும் பெற்ற்க்கொண்டனர். இவ் அணியினர்க்கான  கௌர விப்பு நகழ்வு 08.06.2015 அன்று கல்லூரியில் நடைபெற்றது. 

அதிபர் திருமதி  ச.சிவகுமார்  தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது கல்லூரியின் முன்னாள் விளையாட்டு வீரரும் பழைய மாணவரும் பிரான்ஸ் நாட்டு வர்த்தக பிரமுகருமான திரு சுப்பையா வரதராஜா அவர்களுடன் அவர்தம் பாரியார் அவர்களும் - அவரின் சகோதரனாகிய சு. தில்லையம்பலம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 
 கல்லூரி அலுவலக முன்றலில் வீரர்கள் விருந்தினர்க்கு அறிமுகம் செய்யப்பட்டதனை தொடர்ந்து மாண வர்கள் அணிவகுத்து நிற்க விருந்தினர்களும் வீர வீராங்க னைகளும் றிட்ஜ்வே மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 
மேடையில் வாழ்த்துரைகள் இடம் பெற்றதனைத் தொடர்ந்து வெற்றி அணியினருக்கு விருந்தினர் திரு. சு. வரதராஜா அவர்களால் 53000 ரூபா பணப்பரிசிலும் சான்றிதழ்களும் வழங்கப் பட்டன. வெற்றிபெற்ற அணயினருக்கான கேடயங்களை முன்னாள் அதிபர் திரு. வ. ஸ்ரீகாநதன் அவர்கள் வழங்கினார். 
நிகழ்விற்கான விருந்தினர் வரவழைப்பிற்கான ஒழுங்குகளை முன்னாள் பிரதி அதிபர் திரு. க. இந்திரராஜா அவர்களும், முன்னாள் பழைய மாணவர் சங்கத் தலைவர் எந்திரி வி. உமாபதி அவர்களும் மேற்கொண்டி ருந்தனர். அமரர் சுப்பையா குடும்பத்தினர் சார்பில் பிற்புற மதில் நிர்மாணிப்பின்போதும் 300,000 ரூபா வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 






தகவல் : து. இரவீந்திரன்