Monday 16 December 2013

தீபம் தொலைக்காட்சி செய்தியில் தவறான ஒளிபரப்பு


உலகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சியான தீபத்தில் 11-12-2013 அன்று ஒலிபரப்பாகிய மாலை 18.00 மணிச்செய்தி தொகுப்பின் போது எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட புதிய சிற்றுண்டிச்சாலையின் புகைப்படத்தை எமது கல்லூரியின் அனுமதியின்றி வேறோர் இடத்தின் தகவலுக்காக தவறான முறையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் எமது கல்லூரியை அவமரியாதை செய்வதுடன் ,கல்லூரியில் கல்விகற்ற அனைத்து மாணவர்களின் மனதை மிகவும் சங்கடப்பட வைத்துள்ளது.

தீபம் தொலைக்காட்சியின் தவறான ஒளிபரப்பிற்கு எதிராக யுகே பழைய மாணவர் ஒன்றியம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக  யுகேயில் பிரபல்யமான சட்டத்தரணிககளுடன்  கலந்தாலோசிக்க எமது ஒன்றியம் திட்டமிட்டுள்ளது .
                             நன்றி
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.