Tuesday 10 December 2013

Self study

எமது கல்லூரியில் இவ்வருடம் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கும் 2014 ஆவணி மாதம் உயர்தரப் பரீட்சைக்கும் தோற்றும் மாணவர்களுக்கான சுயகற்றல் (Self Study) வசதிகள் கல்லூரியில் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இரவு 10.00 மணி வரையில் இக்கற்றல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. வீட்டில் மின்சார வசதியின்மை மற்றும் கற்பதற்கான சூழல் வசதியின்மை போன்றவற்றால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கென இவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கல்லூரியின் பழைய மாணவன் திரு.ந.சிவரூபன் அவர்களின் மேற்பார்வையில் மாணவர்கள் கற்றலில் ஈடுபடுவதுடன் தமது சந்தேகங்களையும் அவரிடம் கேட்டு தெளிவடைந்து கொள்கின்றனர். அண்மையில் சுழிபுரத்துக்கு வருகை தந்த ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் திரு.சி.ரவிசங்கர் அவர்கள் அதிபரின் அனுமதி பெற்று  கல்லூரியின் பழைய மாணவர் Dr.செ.கண்ணதாசன் அவர்களுடன் இச் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் மாணவர்களுக்கும் திரு.ந.சிவரூபனுக்கும் உற்சாகமளித்துள்ளார்.