Monday 10 February 2014

உள்ளூர் சமூக சமய கலை நிறுவனங்களையும் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் முயற்சி

சுழிபுரம் மேற்கிலே உறைந்து அருள்பாலித்துவரும் கதிர்வேலாயுதசுவாமி கோவில் கொடி ஏற்ற திருவிழா நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததேகோயில்கள் என்பவை எமது சமய கிரியா சடங்குகளுடன் மட்டும் நின்றுவிடாது எமது பிரதேச கல்வி கலை பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதற்காக மக்களை ஒன்று கூட்டும் இடம் என்பதே எமது ஒன்றியத்;தின் கொள்கைளாகும்.
அந்த வகையிலே கடந்த நான்காந் திருவிழா அன்று எமது உறுப்பினர் திரு சிஇரவிசங்கர் தனது திருவிழாவிலே ஒரு முன்மாதிரியான நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுத்தார்.
பாரதிமுன்பள்ளி திறப்பு விழாவின்போது உதவிய விக்ரோறியாக் கல்லூரி சாரணர்கள் சிறந்த முறையில் வரவேற்பு நடன நிகழ்வை வழங்கிய நடனக்குழுமற்றும் சமூக முன்னேற்றத்திற்கு உழைக்கும் பாரதி கலைமன்றம் மற்றும் ஸ்ரீகணேசா சனசமூக நிலையம் கலைத் தொண்டாற்றிவரும் பொன்னாலை சந்திர பரத கலாலயம் என்பன திருவிழாவின்போது ஊக்குவிப்புத் தொகை வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.
மேலும் கோவில் பரிபாலனசபை மற்றும் சங்காபிசேக சபை ஆகியவற்றிற்கும் நிதி தவி வழங்கப்பட்டன.
அத்துடன் பாரதி கலைமனறம் மற்றும் பாரதி முன்பள்ளி வளர்ச்சியில் முழு அர்ப்பணிப்புடன் செயற்படும் திரு கிருஸ்ணாகரனும்  
லயஞான செல்வர் எனும் மதிப்பினை வழங்கி கொளரவிக்கப்பட்டார்.

விபரங்கள் வருமாறு


ஊக்குவிப்புப் பெறுவோர்தொகைகௌரவித்தோர்
பாரதி கலைமன்றம் 25,000.00திரு ந  சூரியகுமார்
ஸ்ரீகணேசா சனசமூக நிலையம்20,000.00திரு வி உமாபதி;
பொன்னாலை சந்திர பரத கலாலயம்25,000.00திருவி  சிவராமன்
விக்ரோறியாக் கல்லூரி நடனக்குழுவினர்25,000.00திரு செ கண்ணதாசன்
விக்ரோறியாக் கல்லூரி சாரணர்கள25,000.00திரு சி சிவகணேச சுந்தரன்
திரு கிருஸ்ணாகரன்100,000.00திருமதி சிவசுப்பிரமணியம்
கோவில் சங்காபிசேக சபை5,000.00
கோவில் பரிபாலனசபை5,000.00
Total230,000.00

See More Photos

லயஞான செல்வர்